இந்தியாவில் கோவிட் வேகமாக பரவுவதால் ஏற்றுமதி துறையிலும் பாதிப்பு
இந்தியாவில் தினமும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஏற்றுமதி துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தினமும் சுமார் மூன்று லட்சம் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், பொருட்களை ஏற்றுவது மற்றும் இறக்குவதற்கான தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால், உணவுக்காகப் பயன்படுத்தும் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிழங்கு, வெங்காயம், மிளகாய், கடுகு, வெந்தயம், கடலை ஆகிய உணவுப் பொருட்கள் இந்தியாவிலிருந்தே அதிகளவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தினமும் 400 முதல் 500 வரையான கொள்கலன்களில் இந்த உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் கோவிட் வேகமாகப் பரவி வருவதால், விவசாயிகளிடம் இருந்து அவற்றைக் கொள்வனவு செய்து சேகரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் காரணமாகத் தினமும் இறப்போரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.