கோவிட் தொற்றின் புதிய திரிபுகள்! பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை
கோவிட்டின் புதிய தொற்றுக்கள், மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க . ராகுலன் தெரிவித்துள்ளார் .
ஊடகவியலாளர் வினவிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று நோயின் தாக்கம் சுகாதார திணைக்களத்தின் கட்டுக்குள் இருக்கின்ற போதிலும் அது முற்று முழுதாக அபாய நிலைக்குள் அல்ல என்று நாங்கள் கருதிவிட முடியாது. புதிய திரிபுகள் மக்களிடம் பரவி வருகின்றது.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அவதானமாகவும், பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்தும் பேணி அவதானமாகச் செயற்பட வேண்டும்.
இதன் காரணமாகவே நாங்கள் வைத்தியசாலைக்குப் பார்வையாளர்களாக வருபவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
இதற்குப் பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை
வைத்தியசாலைக்குத் தொடர்ந்து வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளார் .
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam