கொழும்பில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற வைத்தியர்களுக்கு கொவிட் தொற்று
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு தடுப்பூசிகளும் பெற்ற வைத்தியர்கள் இருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கொவிட் தொற்று மீண்டும் வேகமாக பரவும் நிலைமையை கருத்திற் கொள்வதற்காக இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மூன்று நோயாளிகளில் ஒருவர் ஒக்ஸிஜன் தேவையுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சில வார்டுகள் மிகவும் நெரிசலாக உள்ளது, கொவிட் நோயாளிகள் ஒருபுறம் மற்றும் தொற்று இல்லாத நோயாளிகள் மறுபுறம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். .
கொவிட் தொற்றாளர்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் ஒரே கழிப்பறை மற்றும் உணவு உற்கொள்ளும் இடம் என்பவற்றை பயன்படுத்தும் சூழலுக்குள் நோயாளிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
அத்துடன் ஒக்ஸிஜனுடனான கட்டில்கள் அனைத்தும் நிரம்பியுள்ளமையினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri