கோவிட் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவர் பலி
கோவிட் தொற்று காரணமாக இலங்கைக்குள் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் ஹிரிவடுன்ன பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 63 வயதுடைய ஆணும், யாழ். கரவெட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 604ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்று மாத்திரம் 99 பேர் நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டின் மொத்த கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை 95737ஆக அதிகரித்துள்ளது.