சாட்சியமளிக்க பொலிஸ் அதிபர் நீதிமன்றில் முன்னிலை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிக்க பொலிஸ் மா அதிபர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் அமர்வின் முன்னால், இது தொடர்பான விசாரணை நடத்தப்படும் நிலையில் இன்று பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரட்ன அதில் சாட்சியமளிக்கிறார்.
முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தபோதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உதாசீனப் போக்கை கடைப்பிடித்ததாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளா் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.