புதுக்குடியிருப்பில் வெடிபொருட்களை வைத்திருந்த தம்பதியினர் கைது(Photos)
புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் வீட்டில் வெடிபொருள் வைத்திருந்த கணவனும் மனைவியும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவபுலனாய்வு பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமையக் குறித்த வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ள நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட குடும்பப் பெண் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளை அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட குடும்பத் தலைவனைப் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில்
72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றின் அனுமதியைப்
பொலிஸார் பெற்றுள்ளனர்.


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam