புதுக்குடியிருப்பில் வெடிபொருட்களை வைத்திருந்த தம்பதியினர் கைது(Photos)
புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் வீட்டில் வெடிபொருள் வைத்திருந்த கணவனும் மனைவியும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவபுலனாய்வு பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமையக் குறித்த வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் வெடிபொருட்கள் காணப்பட்டுள்ள நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட குடும்பப் பெண் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளை அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட குடும்பத் தலைவனைப் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில்
72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றின் அனுமதியைப்
பொலிஸார் பெற்றுள்ளனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri