எந்தவொரு நாடும் குறிப்பிட்ட தடுப்பூசியை கட்டாயமாக்கவில்லை! - அரசாங்கம் அறிவிப்பு
உலகின் எந்தவொரு நாடும் குறிப்பிட்ட ஓர் கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை சுகாதார அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
அனைத்து நாடுகளுமே உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட வெளிநாட்டவர்களை அனுமதிப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஏதேனும் ஓர் நாட்டில் குறிப்பிட்ட ஓர் தடுப்பூசியை மட்டும் பயன்படுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தால் அவ்வறான நாடுகளுக்கு செல்வோருக்கு, நாட்டில் அந்த தடுப்பூசி கையிருப்பில் இருந்தால் அந்த தடுப்பூசிகளை வழங்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடு செல்வோர் குறிப்பிட்ட ஓர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்பினால் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
