மட்டக்களப்பில் நகரசபைக்கான காணி கொள்வனவில் ஊழல்

Batticaloa
By Sheron Apr 27, 2023 10:43 AM GMT
Report

மட்டக்களப்பு- ஏறாவூர் நகரசபை நிர்வாகத்தினால் குப்பை கொட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள  தனியார் காணி கொள்வனவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏறாவூர் நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக கடந்த வாரம் 04 ஏக்கர் காணியை ரூபா 87 இலட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த காணியை பிரபல காணி வர்த்தகரிடம் இருந்து ஏறாவூர் நகரசபை நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த காணிக்கு 27 இலட்சம் விலைக் கழிவு கொடுத்ததாகவும், கூறப்படுகிறது. ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவிற்குள் தமிழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மேற்படி காணியானது தனியார் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் நகரசபைக்கான காணி கொள்வனவில் ஊழல் | Corruption In Purchase Of Garbage Dump Land

அத்துடன் குறித்த காணி யாருக்கு உரிமை என்பது தொடர்பாக பல வருடங்களாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் குறித்த காணிக்கு எதிராக ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த (02.02.2023)ஆம் திகதி தனது சட்டத்தரணி மூலம் கோரிக்கைக் கடிதம் அனுப்பியதாகவும் அதற்கு எந்தப் பதிலும் அனுப்பாமல் அவசர அவசரமாக ஏறாவூர் நகரசபைக்கு இக்காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்த காணிக்கு உரிமைகோரும் ஒருவர் கூறியுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்து மேற்படி காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்படி காணி தொடர்பாக ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளரும் ஏறாவூர் பொலிஸாரிடம் புகார் செய்துள்ளதாக தெரியவருகிறது.

ஏறாவூர் பொலிஸாரிடம் முறைப்பாடு

ஏறாவூர்பற்று பிரதேசசபை எல்லைக்குள் அமைந்துள்ள மேற்படி காணிக்கு காணி வர்த்தகர் போலியான ஆவணங்களை வழங்கி ஏறாவூர்பற்று பிரதேச சபை நிர்வாகத்திடம் (16.10.2021)ஆம் திகதி அன்று இந்தக் காணிக்கு பாதை போடுவதற்கு அனுமதி பெற்றுள்ளார்.

மட்டக்களப்பில் நகரசபைக்கான காணி கொள்வனவில் ஊழல் | Corruption In Purchase Of Garbage Dump Land

பின்னர் வேறு ஒரு இடத்தை காட்டி மேற்படி காணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதை அறிந்த ஏறாவூர் பற்று பிரதேச சபை நிர்வாகம் இக் காணிக்குள் நடைபெற்ற பாதை அமைக்கும் பணியை நிறுத்துமாறு கோரியதுடன், ஏறாவூர்பற்று பிரதேசசபை தவிசாளர் மற்றும் செயலாளர் உடன் களவிஜயம் மேற்கொண்டு பாதை இடுவதை தடுத்து நிறுத்தி சட்டவிரோதமாக பெறப்பட்ட அனுமதியை இரத்துச் செய்து அது விடயமாக ஏறாவூ பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினமே முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன் மேற்படி காணி தங்களுடைய காணி எனக் கூறி தமிழ் மக்கள் சிலர் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன் நிலையில் அவசர அவசரமாக அதுவும் பிரதேச சபை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மேற்படி காணியை யாருடைய அனுமதியின் கீழ் இக்காணி கொள்வனவு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது?

இலாப நோக்கத்திற்கான ஊழல்

மேற்படி காணி கொள்வனவு பிரதேச சபை சட்டங்களை, சுற்று நிருபங்களை பின்பற்றாது குறிப்பிட்ட சில நபர்களின் தன்னிச்சையான முடிவு மற்றும் இலாப நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

1.அதுமட்டுமல்ல இக் காணியை கொள்வனவு செய்யும் போது காணிக்குரிய ஆவணங்கள் சரியான ஆவணங்களா என எந்தச் சட்டதரணி மூலம் பரிசீலிக்கப்படவில்லை.

2.ஒரு அரச நிறுவனத்தின் தேவைக்காக கொள்முதல் செய்யப்படும் காணியை அளவீடு செய்வதற்கு அரச நிள அளளையார் திணைக்களத்தின் மூலமே அளவீடு செய்ய வேண்டும். ஆனால் இந்தக் காணி கொள்முதல் செய்யும் விடயத்தில் தனியார் லைசன்ஸ் நில அளவையாளரைக் கொண்டு நில அளவை படம் வரையப்பட்டுள்ளது.

3. இந்த நில அளவை செய்யும் படத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நபர் காணி உரிமையாளராக இருக்கவேண்டும். ஆனால் இந்தப் படத்தில் ? பிரதேசசபை பதவி நிலை உத்தியோகத்தரால் Point Out செய்யப்பட்டுள்ளது.

4. இந்த நில அளவைப் படத்தில் காணியின் உரிமையாளர் சம்பந்தமாக எதுவும் கூறப்படவில்லை.

5.சபை கலைக்கப்பட்டு விசேட ஆணையாளாரின் கீழ் சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள காலப்பகுதியில் இவ்வளவு பெரிய தொகையைச் சலவு செய்து காணி கொள்முதல் செய்ய செயலாளருக்கு யார் அனுமதி வழங்கியது என்ற கேள்விகள் எழுகிறது?

மக்களின் பெருந்தொகை வரிப்பணத்தை கையாண்டமை மற்றும் இலாப நோக்கத்திற்காக முறையற்ற சர்ச்சைக்குரிய காணியை பெருந்தொகை நிதி கொடுத்து கொள்வனவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் மேற்படி காணி கொள்வனவில் இடமபெற்றிருக்கலாம் என்பதால் இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏறாவூர் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US