பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கோவிட் பரவல் உயர்வு!
பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கோவிட் தொற்றின் பரவல் வேகமெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 9,055 பேர் பாதிக்கப்பட்டதோடு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி 25ம் திகதிக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும் என பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 4,589,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 127,926 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 167,382 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 206 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,294,506 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
