யாழில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் 7 பேருக்குக் கொரோனா!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட மேலும் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் 588 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்படி, யாழ். மாநகரின் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். ஏனைய இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.
அத்துடன், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்கும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது" - என்றார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri