கல்வி அமைச்சின் கட்டடத்தை உரிமை கோரும் குத்தகைதாரர்
இரண்டு வருடங்கள் குத்தகைக்கு பெற்றுக் கொண்ட கட்டடத்தின் முதல் சொந்தக்காரர் தான் என கல்வி அமைச்சுக்கு சொந்தமான சொத்துக்கு உரிமை கோரி ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக கோபா குழுவில் தெரிய வந்துள்ளது.
பின்வத்த உபனந்த பாடசாலை, பாடசாலை மேற்பார்வை குழுவின் அனுமதியின்றி 2005 ஜனவரி 25 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையை சுனாமி தாக்கியதால் பின்னர் இயங்கவில்லை.அதனால் 2008 ஆம் ஆண்டு மேல் மாகாண சபை அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய இரண்டு வருட குத்தகைக்கு மேற் குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்படுகிறது.
வழக்கு தாக்கல்
கல்வியமைச்சுக்கு சொந்தமான கட்டடத்தை மாகாண சபையின் அனுமதியில் குத்தகைக்கு வழங்குவதற்கு எவ்வித சட்டபூர்வ உரிமையும் அற்ற நிலையில் 02 வருடங்கள் குத்தகைக்கு வழங்கிய பின்னர் அதனை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
பின்னர் கட்டடத்தை மீள பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சால் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது.வழக்கில் குத்தகைதாரரை வெளியேறுமாறு தீர்ப்பளிக்கப்படுகிறது.
விசாரணை
ஆனால் அவர் மேல் நீதிமன்றத்தில் இத் தீர்ப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்கிறார். அங்கு வழக்கு தள்ளுப்படி செய்யப்படுகிறது.
பின்னர் அவர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார் அங்கேயும் வழக்கு தள்ளுப்படி செய்யப்படுகிறது.
இப்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோபா குழு தலைவரால் அறிவுறுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



