தமிழரின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி: வடிவேல் சுரேஷ் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சதிமுயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார
பதுளையில் நடைபெற்ற இளைஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், இம்முறை தேர்தலில் போட்டியிட பயந்து பலரும் ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், நான் நமது பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்காக துணிந்து போட்டியிட முன்வந்துள்ளேன்.
சதி முயற்சி
இம்முறை நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தடுப்பதற்காகவே ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் ஊடாக போட்டியிடுகின்றேன்.

இம்முறை நமக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாது போனால், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உளளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் போது அது எதிரொலிக்கும்.
எனவே நமது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களியுங்கள். அது வடிவேல் சுரேஷ் ஆகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பொருத்தமான எவருக்கேனும் வாக்களியுங்கள் என்றும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri