சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும்:லிட்ரோ தலைவர்
உலக சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்துள்ளதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட விலையை விட விலை குறைப்பு இருக்கும்

அண்மையில் எரிவாயுவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதனை விட அதிகமாக இந்த விலை குறைப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
16 மாதங்களுக்கு தொடர்ந்தும் எரிவாயுவை விநியோகிக்கக் கூடிய வகையில் எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல மாதங்களாக சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. தற்போது போதுமான அளவில் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதுடன் தட்டுப்பாடும் நீங்கியுள்ளது எனவும் முதித்த பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan