சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு - விசேட கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம்
சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்த சம்பவங்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardane) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த வெடிப்புச் சம்பவங்கள் வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ள காரணங்களால் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.