சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீது தடை? விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Shavendra Silva Sri lanka Kamal Gunaratna United Kingdom
By Dias Sep 27, 2021 06:28 PM GMT
Report

பிரித்தானிய தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்களினால் (Tamils for Labour) நடாத்தப்படும் வருடாந்த மாநாடு தவிசாளர்   சென் கந்தையா அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (26.09.2021) பிற்பகல் பிறைற்ரனில் உள்ள கில்ரன் ஹோட்டலில் இடம்பெற்றது.

தவிசாளர் சென் கந்தையா அவர்கள் தனது வரவேற்புரையில், இலங்கையில் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கற்பழிப்பு, சித்திரவதை, வலிந்து காணாமல் போதல், கடத்தல், சட்டவிரோத கொலைகள் மற்றும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்கள் இராணுவம் மற்றும் சில அரசியல்வாதிகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவ்வாறாக இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு தமிழ் மக்களுக்கு நீதி வழங்க தற்போதைய பிரித்தானிய அரசாங்கத்தை ஏனைய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற தொழிற்கட்சி வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.

வெளியுறவுத்துறையின் நிழல் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கொளரவ லிசா நன்டி (Rt Hon Lisa Nandy MP) அவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது,

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட/ இழைக்கப்பட்டு வருகின்ற சர்வதேச குற்றங்களிற்கான பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பரிந்துரைப்பது போன்ற செயற்பாடுகளை தொழிற்கட்சி முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

“மனித உரிமைகள், சட்டத்திற்குட்பட்ட ஆட்சி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை எப்போதும் தொழிற்கட்சியின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

இம்மாநாட்டில் தொழிற்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களிற்கான நிழல் அமைச்சருமாகிய கொளரவ ஸ்ரிபன் கினோக் அவர்கள் (Stephen Kinnock MP), கொளரவ சிவோன் மெக்டோனா அவர்கள் (Siobhain McDonagh MP), கொளரவ பரிகாடினர் (Barry Gardiner MP), கொளரவ டோன் டோன் (Dawn Butler MP) கொளரவ ஸரீபன் ரிம்ஸ் (Stephen Timms MP) எனப் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டின் பிரதான பேச்சாளர்களாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான (ITJP) திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ஹரிசன் (Frances Harrison), சித்திவதையில் இருந்து விடுதலை அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சோனியா ஸ்கேற்ஸ் (Sonya Sceats, Chief executive of freedom from Torture), சுபாசினி நாதன் (வழக்கறிஞர், மனித உரிமை செயற்பாட்டாளர்), ஆரபி ராஜ்குமார் (Advocacy member, PEARL) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Rt Hon Stephen Kinnock MP தனது உரையில்,

அண்மையில் நடைபெற்ற UNHRC தீர்மானம் வரவேற்கத்தக்கதாக இருப்பதாகவும் மேலும் அதில் பல குறைபாடுகள் இருப்பதனையும் சுட்டிக்காட்டியதோடு பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை ஐசிசிக்கு பரிந்துரைக்க மறுப்பது ஏன் என்பது தங்களுக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பிரித்தானிய அரசிற்கு கடுமையான மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளும் இலங்கையுடன் GSP வரிச்சலுகைக்கு உடன்படக்கூடாது எனவும் தெளிவான நெறிமுறைகளைக் கொண்ட வர்த்தகக் கொள்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமது கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய Siobhain McDonagh MP, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலையை எதிர்த்து 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற சதுக்கத்தில் கூடியிருந்த தமிழ் சமூகத்தின் தனது நீடித்த நினைவுகளை எடுத்துரைத்ததுடன், “தமிழ் சமூகத்திற்கு என்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வேன்” எனக்கூறினார்.

பிரான்சிஸ் ஹரிசன் (ITJP) கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை எடுத்துரைத்தார். அத்துடன் போர்குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் ஐநாவால் உருவாக்கப்படவுள்ள சுயாதீன பொறிமுறைக்கு ஒரு வருடம் மட்டுமே உள்ளதாகவும், தரவு சேகரிக்க நிறுவப்பட்ட பொறிமுறையின் நிதி 50% குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தீர்மானம் செயற்பாடற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய ஹரிசன், பொலிஸ் பயிற்சி தொடர்பான பிரச்சனைகளை பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மீது மட்டுமல்ல, பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன உள்ளிட்ட பட பல அதிகாரிகள் மீது தடைகளை விதிக்க அரசினை கோருமாறும் அம்மாநாட்டில் அவர் கேட்டுக்கொண்டார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US