சீனாவிற்கு குரங்குகளை அனுப்புங்கள்! இல்லை என்றால் சொட்கண் துப்பாக்கியை வழங்குங்கள்(Video)
நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் இருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக கோட்டாபய நாட்டை விட்டு ஓடியதை குறிப்பிடமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில்இன்று (09.06.2023)உரையாற்றும் போதே இதனை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள மிகவும் மோசமான பிரச்சினையாக குரங்குளின் செயற்பாடுகள் இருக்கின்றது.
முழுமையான ஆதரவு வழங்கப்படல்
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது கட்டாயமானது.
ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடகே முன்வைத்த தனிநபர் பிரேரணையை ஆதரிப்பதோடு இது தொடர்பாக அரசாங்கம் எந்த விதமான முயற்சிகள் எடுத்தாலும் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அவசரமாக மந்திரிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சொட்கண் துப்பாக்கியை கோருவதாகவும் அமைச்சர் விரைவில் இதற்கு தீர்வை தரவேண்டும் என்றும் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |