அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிரான விசாரணைகள் குறித்து ஐ.நாவில் முறைப்பாடு
அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அருட்தந்தை சிறில் காமினியிடம் விசாரணை நடாத்துவதன் மூலம் அவரை அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அருட்தந்தைக்கு எதிரான விசாரணைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான அலுவலகத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உள்ளிட்டவர்கள் இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளனர்.
குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடிய நபர்கள் பற்றிய விபரங்கள் உண்டு என கூறிய ஞானசார தேரரிடம் விசாரணை எதுவுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
குண்டு தாக்குதல் பற்றி கூறிய ஞானசார தேரிடம் விசாரணை நடத்தப்படவில்லை, நிலந்த ஜயவர்தனவிடம் விசாரணையில்லை. ஜனாதிபதி விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் அருட்தந்தை சிறில் காமினியை மட்டும் விசாரணைக்கு உட்படுத்துவதும் அழுத்தங்களை பிரயோகிப்பதும் கண்டிக்கப்பட வேண்டியது என காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri