நெல் அறுவடை குறைந்தால் இழப்பீடு - கமத்தொழில் அமைச்சர்
இம்முறை பெரும்போக அறுவடையின் போது நெல் அறுவடை குறைந்தால், அதற்காக அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் (Gotapaya Rajapaksa) இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் உரிய நேரத்திற்கு பசளை வழங்கப்படும். வழங்கப்படும் பசளை தொடர்பான பொறுப்பை அரசாங்கம் முற்றாக ஏற்றுக்கொள்ளும்.
சேதனப் பசளையை தயாரிக்க அரசாங்கம் வழங்கிய 12 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுக்கொண்ட உழவர்களை தவிர ஏனைய உழவர்களுக்கு கமத்தொழில் அபிவிருத்தி பிரதேச மத்திய நிலையத்தின் ஊடாக சேதனப் பசளை எந்த தட்டுப்பாடும் இன்றி இலவசமாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நெல் அறுவடை குறைந்தால், அரசாங்கம் இழப்பீடு வழங்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், பல மாவட்டங்களில் உழவர்கள் மத்தியில் காணப்பட்ட சந்தேகம் தீர்ந்துள்ளது என மாவட்ட கமத்தொழில் அபிவிருத்தி தொடர்பான பிரதி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
