கடுமையான சுகாதார விதிகளுக்கு அமைவாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்
கடுமையான சுகாதார விதிகளுக்கு அமைவாக 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன.
இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் 4,513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சமாக இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பரீட்சையானது எதிர்வரும் பத்தாம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இதன்போது ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் வழமையான மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக கோவிட் தொற்றுத் தொடர்பில் விசேட நோக்குனரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொவிட் தொடர்பான சகல சுகாதார நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்து வரும் பரீட்சார்த்திகளுக்கு தனியான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றவுள்ள அதேநேரம் இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri