கடுமையான சுகாதார விதிகளுக்கு அமைவாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம்
கடுமையான சுகாதார விதிகளுக்கு அமைவாக 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளன.
இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் 4,513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சமாக இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பரீட்சையானது எதிர்வரும் பத்தாம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இதன்போது ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் வழமையான மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக கோவிட் தொற்றுத் தொடர்பில் விசேட நோக்குனரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொவிட் தொடர்பான சகல சுகாதார நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்து வரும் பரீட்சார்த்திகளுக்கு தனியான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றவுள்ள அதேநேரம் இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri