குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பேருந்து சேவை ஆரம்பம்
கிண்ணியாவில் படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து நாளை (24) முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவை ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண செயலாற்று முகாமையாளர் எம்.ஏ.உவைஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்கவின் பணிப்புரைக்கமைய குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றிச் செல்வதற்காக பேருந்து சேவை நாளை (24) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
இச்சேவை தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் இடம்பெறவுள்ளதாகவும் முகாமையாளர்
தெரிவித்துள்ளார்.