ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முல்லைத்தீவில் நினைவஞ்சலி

Tsunami
By Independent Writer Dec 26, 2020 08:52 PM GMT
Independent Writer

Independent Writer

in ஆன்மீகம்
Report

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழப்புகள் மாத்திரமின்றி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்த இந்த துன்பியல் நிகழ்வான ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன.

இவ்வாறு பதினாறு ஆண்டுகளை கடந்துள்ள போதிலும் உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைந்து நாடளாவிய ரீதியில் வருடம் தோறும் இந்த ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றதோடு அங்கு உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உறவுகள் தங்களுடைய உறவுகளை நிறைந்து உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பேணி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மு.ப 9.20மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் சுடரேற்றி சுனாமி பேரவையினால் உயிரிழந்த மக்களிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் சுனாமி நினைவலைகளின் மீள்பார்வை தொடர்பான காட்சிப் பதிவுடனான கருத்துரை இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலர், மாவட்ட செயலக கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US