ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு முல்லைத்தீவில் நினைவஞ்சலி
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழப்புகள் மாத்திரமின்றி பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிவடைந்த இந்த துன்பியல் நிகழ்வான ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன.
இவ்வாறு பதினாறு ஆண்டுகளை கடந்துள்ள போதிலும் உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைந்து நாடளாவிய ரீதியில் வருடம் தோறும் இந்த ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றதோடு அங்கு உயிரிழந்தவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
உறவுகள் தங்களுடைய உறவுகளை நிறைந்து உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பேணி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மு.ப 9.20மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் சுடரேற்றி சுனாமி பேரவையினால் உயிரிழந்த மக்களிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரையுடன் சுனாமி நினைவலைகளின் மீள்பார்வை தொடர்பான காட்சிப் பதிவுடனான கருத்துரை இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலர், மாவட்ட செயலக கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

Viral Video: இந்த பை போதுமா? திருமணம் முடிந்த கையோடு ஐயர் பார்த்த வேலை.. கேமராவில் சிக்கிய காட்சி Manithan

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு News Lankasri
