தடைகளை தாண்டி உயிர்நீத்த வீரர்களை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கிறது கிளிநொச்சி மண்
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம் பெயர் தேசங்களில் இன்றைய தினம் தேசத்தின் விடுதலைக்காய் போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது
இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டியும் மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமாக தாயக உறவுகள் அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரின், இராணுவத்தினரின் தடைகளை தகர்த்தெறிந்து மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.