கொழும்பில் மாபெரும் போராட்டம்! கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்(Video)
தேசிய மக்கள் சக்தியினரால் தற்சமயம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தை கலைக்கும் நோக்குடன் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தாமரைத் தடாகம் முதல் நகர மண்டபம் வரையான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உட்பட 25 பேருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தடை உத்தரவினையும் மீறி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.