நீர்கொழும்பு ஹோட்டலில் நடந்த பயங்கரம் - கொலை செய்யப்பட்ட ஊழியர் - சந்தேக நபர் தப்பியோட்டம்
ஹோட்டல் ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில், ஊழியர் ஒருவரால், கத்தியால் குத்தப்பட்ட மற்றுமொரு ஊழியர் உரிழிழந்துள்ளார்.
ஜாஎல பழைய நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, ஊழியர்களில் ஒருவர் மற்ற ஊழியரின் கழுத்து மற்றும் காலில் கத்தியால் தாக்கியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல்
கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த ஊழியர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய குமார என்ற நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் மற்றைய ஊழியர், பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
