தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பிரதேசங்களில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நான்கு இளைஞர்களின் சடலங்கள் தற்போது அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்கள் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கலகொட பிரதேசத்தினை சேர்ந்த பொடி மண்டிஸ் என அழைக்கப்படும் ஹலம்ப உதேஸ் மதுரங்க மற்றும் தடல்லவைச் சேர்ந்த சிதும் சஞ்சனா ஆகிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் ஆறுதல்
பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று உயிரிழந்த கவிஷ்க அஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர் News Lankasri