கொழும்பு மத்திய பேருந்து நிலையம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
பல்லாயிரக்கணக்கான பயணிகள் நாளாந்தம் வந்து செல்லும் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் தற்போதைக்கு நாளாந்தம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் மற்றும் பல்லாயிரம் பயணிகள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக மாறியுள்ளது.
முக்கிய போக்குவரத்து மையம்
இந்நிலையில் குறித்த கட்டடத் தொகுதிகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்கள் மற்றும் பேருந்து ஊழியர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் கொழும்பு மத்திய பேருந்து நிலையக் கட்டடம் முற்றாக மாற்றியமைக்கப்பட்டு, பயணிகள் ஓய்வறை, நிர்வாகத் தொகுதி மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டதாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

டக்ளசுடன் சேர்ந்த சி.வி.கே மற்றும் பலருக்கு செம்மணியில் நேரடியாக விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 6 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
