கொழும்பு - பதுளை வீதி போக்குவரத்து தொடர்ந்து தடை: வெளியேற்றப்படும் மக்கள்
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றிரவு வீதியின் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதால், இன்று (6.11.2023) காலை பணியை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
போக்குவரத்து தடை
பத்கொடை பிரதேசத்தில் நேற்று (05.11.2023) பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ், வீதி சீரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், பத்கொடையில் ஆபத்தான நிலையில் உள்ள 10 வீடுகளின் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri