மாகந்துர மதுஷின் சொத்துக்களை பெற திட்டமிடும் மூன்று குழுக்கள்!
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாகந்துர மதுஷின் சொத்துக்களுக்கு பேராசை கொண்டமையே கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைக்கு காரணம் என முன்னாள் விமானப்படை புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை கூறியுள்ளார்.
''மாகந்துர மதுஷ், கஞ்சபானை இம்ரான், கிளப் வசந்த ஆகிய மூவரும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையானது பெரும் சொத்து குவிப்புக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை ஆகும்.
குழுக்களுக்கிடையிலான போட்டி
பொலிஸாரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் மற்றும் ஊடகங்களில் நாம் காணும் தகவல்களின்படி. முக்கியமாக மூன்று குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த குழுக்களுக்கிடையிலான போட்டியே தாக்குதலாக மாறியுள்ளது.
இதில் தற்போது மதுஷின் அணிக்கு கஞ்சிபானை இம்ரான் தலைமை தாங்குகிறார்.
இதனால் மதுஷின் கொலைக்கு பின்னர் அவருடைய பணம் அனைத்தும் கிளப் வசந்தவின் கைகளுக்கு சென்றதாகவும் அதனை மீட்கவே இந்த தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் எனவும் விசாரணைகளின் மூலம் நம்பப்படுகிறது.'' என கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 15 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
