யாழில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் சூரியன் உச்சம் கொடுக்கும் என யாழ். பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பெறுப்பதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என நேற்றைய தினம் (06.04.2023) அவரிடம் வினவியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சூரியன் வட துருவ நோக்கிய பாதையில் கடந்த 5ஆம் திகதி இலங்கையின் தெற்கு பகுதியான அம்பாந்தோட்டைப் பகுதியில் உச்சம் கொடுத்த நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் யாழ். மாவட்டத்திற்கு உச்சம் கொடுக்கவுள்ளது.
வெப்பநிலை
தற்போது யாழ். மாவட்டத்தின் வெப்பநிலை 34 பாகையைத் தாண்டியுள்ள நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் 35 பாகையைத் தாண்டும்.
இவ்வாறான நேரங்களில் யாழ். மாவட்டத்தின் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
யாழ். மாவட்டத்தில் உச்சம் கொடுக்கும் சூரியன் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம்
17ஆம் திகதி வரை கடுமையான வெப்பம் நிலவுகின்ற நிலையில், எதிர்வரும் மே மாதம்
முதல் திகதி வரை வெப்பநிலை தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
