திருகோணமலையில் பெண் உட்பட 6 பேர் கைது
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவம் நேற்றையதினம்(01.04.2025) இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினமே கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகள்
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 35, 20, 21, 22, 28 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
