வவுனியாவில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் காதை கடித்து குதறிய இளைஞன்: ஒருவர் படுகாயம்
வவுனியா, வீரபுரம், சின்னத்தன்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் காதை கடித்து குதறியமையினால் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (04) இரவு 7.30 மணியளவில் வீதியில் சென்ற சமயத்தில் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மோதல் சம்பவம்
வாய்தர்க்கம் மோதலாக மாறியதில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் ஒர் இளைஞன் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.

மேலும், தலையில் வாள்வெட்டு காயம் மற்றும் காது
துண்டாக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபரொருவர் வவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam