வவுனியாவில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் காதை கடித்து குதறிய இளைஞன்: ஒருவர் படுகாயம்
வவுனியா, வீரபுரம், சின்னத்தன்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் காதை கடித்து குதறியமையினால் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (04) இரவு 7.30 மணியளவில் வீதியில் சென்ற சமயத்தில் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மோதல் சம்பவம்
வாய்தர்க்கம் மோதலாக மாறியதில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் ஒர் இளைஞன் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.

மேலும், தலையில் வாள்வெட்டு காயம் மற்றும் காது
துண்டாக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபரொருவர் வவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam