முன்னாள் அரசியல் கைதியிடம் மூன்றரை மணி நேரம் சிஐடியினர் விசாரணை
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மூன்றரை மணி நேரம் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) அவர்களை கடந்த முதலாம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அவர் அன்றைய தினம் தன்னால் வரமுடியாதுள்ளதாக தெரிவித்து இன்று (04.12) வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்தார்.
அதனடிப்படையில் இல 149, பூட்டானி கெப்பிட்டல் கட்டிடம், கிருலப்பனை வீதி, பொல்லேன்கொட, நாரம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 3 ஆம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றது.
இதன்போது சுமார் மூன்றரை மணிநேரம்
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri