முன்னாள் அரசியல் கைதியிடம் மூன்றரை மணி நேரம் சிஐடியினர் விசாரணை
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மூன்றரை மணி நேரம் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) அவர்களை கடந்த முதலாம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அவர் அன்றைய தினம் தன்னால் வரமுடியாதுள்ளதாக தெரிவித்து இன்று (04.12) வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்தார்.
அதனடிப்படையில் இல 149, பூட்டானி கெப்பிட்டல் கட்டிடம், கிருலப்பனை வீதி, பொல்லேன்கொட, நாரம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 3 ஆம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றது.
இதன்போது சுமார் மூன்றரை மணிநேரம்
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri