கந்தளாய் சோழீசுவரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் கலந்துகொண்ட குகதாசன் எம். பி
திருகோணமலை கந்தளாயில் பிரசித்தி பெற்ற சோழீசுவரம் சிவன் ஆலய மகோற்சவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கலந்து கொண்டார் .
சதுர்வேதி மங்களபுரம் என புராதன பெயரைக் கொண்ட கந்தளாய் என தற்போது அழைக்கப்படும் ஊரில் சோழ மன்னர்கள் ஆட்சியில் சோழீசுவரம் எனும் பெயருடன் சிவன் அருள்பாலிக்கும் சிவாலயம் கட்டுவிக்கப்பட்டு முறைப்படி கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு இப்போது ஊர்மக்களினால் பன்னிரெண்டு நாட்களை கொண்ட வருடாந்த மகோற்சவம் நடாத்தப்பட்டு வருகிறது .
ஒன்பதாம் நாள் திருவிழா
இதன் ஒரு அங்கமாக ஒன்பதாம் நாள் திருவிழாவாக சப்பரத் திருவிழா 13.09.2024 அன்று நடைபெற்றது .
இப்புதிய சப்பரத்திற்கான நிதியை பன்முகபடுத்தப்பட்ட நிதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஒதிக்கியமைக்கு குறித்த பிரதேச மக்கள் நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |