இலங்கை வருகின்றார் சீன பிரதமர்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு வரவுள்ளார். இவரது விஜயம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 திகதி இடம்பெறவுள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடவுள்ளார் .
சீன பிரதமர் துறைமுக நகரின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது கொழும்பு துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு விவகாரம் மற்றும் சீனாவின் பொறுப்புகள் என்பது குறித்து உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்படவுள்ளது. கொழும்பு துறைமுக நகர் குறித்து தேசிய அரசியலிலும் சர்வதேச அரங்கிலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சீன பிரதமர் இலங்கை வருகிறார்.
துறைமுக நகருக்கு சீனா கொடுத்துள்ள முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலேயே சீன அரசு உயரிய பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 3 மணி நேரம் முன்

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
