இலங்கை வருகின்றார் சீன பிரதமர்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு வரவுள்ளார். இவரது விஜயம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 திகதி இடம்பெறவுள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடவுள்ளார் .
சீன பிரதமர் துறைமுக நகரின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது கொழும்பு துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு விவகாரம் மற்றும் சீனாவின் பொறுப்புகள் என்பது குறித்து உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்படவுள்ளது. கொழும்பு துறைமுக நகர் குறித்து தேசிய அரசியலிலும் சர்வதேச அரங்கிலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ள நிலையில் சீன பிரதமர் இலங்கை வருகிறார்.
துறைமுக நகருக்கு சீனா கொடுத்துள்ள முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலேயே சீன அரசு உயரிய பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
