இலங்கைக்குள் நுழைந்த சீன பாதுகாப்பு அமைச்சர்! மறைக்கப்பட்ட இரகசியங்கள்
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் சாதாரண மனிதர் அல்ல, அவர் அங்கே மிகவும் சக்திவாய்ந்த ஒருவராக திகழ்கின்றவர். எதிர்வரும் காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லரசாக சீனா உருமாறுவதற்கு அதிவேகமாக பயணித்து கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தை இலகுவாக கடந்து சென்றுவிட முடியாது என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
வெறுமனே இலங்கைக்கான விஜயம் மாத்திரமின்றி அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து கலந்துரையாடல்களை நடத்துவதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையினுடைய அரசியல் நகர்வுகள் நாளுக்கு நாள் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அங்கு சென்றிருந்தார்.
அதன் பின்னரான இந்தியாவின் நடவடிக்கை எப்படி இருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின்போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்ன? அதில் பொதிந்திருக்கும் மர்மங்கள் என்ன என்பது தொடர்பில் விரிவான விளக்கங்களை அளிக்கின்றார் மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் அவர்கள்.
அவருடனான முழுமையான நேர்காணல் இதோ,