தைவானை மிரட்டும் வகையில் சீனாவின் நடவடிக்கை! உலக செய்திகளின் தொகுப்பு(Video)
தைவானை மிரட்டும் வகையில் தனது போர் விமானங்கள், ஏவுகணைகளை அந்நாட்டின் எல்லை அருகே உள்ள தீவில் சீனா நிறுத்தி வைத்துள்ளது.
36 ராணுவ விமானங்கள் அங்கு வட்டமிட்டு வருகின்றன. தவிர கடற்படை கப்பல்கள், நிலத்தில் இருந்து பாயும் ஏவுகணைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் 3 சீன டிரோன்கள் உளவுப் பார்ப்பதாகவும் தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் செயல்கள் பொறுப்பற்றவை என்றும் தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கான முயற்சி என்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,