லண்டனில் திடீரென வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்! நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நியூயோர்க் மற்றும் லண்டன் வைத்தியசாலைகளில் கொரோனா பாதிப்பால் சிறார்கள் அனுமதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் வேகமாக பரவி வரும் நிலையில், இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூயோர்க் நகர மருத்துவமனைகளில் திடீரென்று சிறார்கள் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பரிந்துரைக்கப்படும் ஒரு ஆய்வில் குழந்தைகள் ஒமிக்ரோன் தொற்றால் அதிகம் பாதிக்கப்படலாம் என்றே தெரியவந்துள்ளது.
இதன்படி, குழந்தைகள் ஒமிக்ரோன் நோய்த்தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 2020ல் கொரோனா முதல் அலையை விட 20 சதவீதம் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.
நோயாளிகள் மருத்துவமனையை நாடும் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தொற்றின் தன்மை கணக்கிடப்படுவதாக சுவிஸ் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சிறார்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இருப்பினும் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் சிறார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam