வவுனியாவில் இளைஞன் ஒருவரின் தகாத செயல்! தலைமறைவானவரை தேடும் பொலிஸார்
வவுனியா பாரதிபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மாலை தனியார் வகுப்பு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - பாரதிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இளைஞன் தலைமறைவு
முறைப்பாட்டையடுத்து பொலிசார் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதையடுத்து குறித்த இளைஞரைத் தேடிச் சென்றபோதும் இளைஞன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
பொலிசார் இளைஞனைக் கைது செய்யுமாறு இன்று கிராம அபிவிருத்திச் சங்கம் மண்டபத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியை அழைத்து மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
சிறுவர்கள் மீது அதிக கவனம் எடுக்குமாறும் எங்கு செல்கின்றார்கள் எவருடன் பழக்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் உறவினர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம் என்றும் பொதுமக்கள் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்புக்கு வழங்குமாறும் இதன்போது கேட்டுக்கொண்டனர்.
தலைமறைவாகிய இளைஞரைக் கைது செய்ய
நடவடிக்கை எடுப்பதாகவும் பொதுமக்களுக்கு உறுதிவழங்கியதையடுத்து பொதுமக்கள்
அங்கிருந்து கலைந்து சென்றனர்.