சென்னை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! இலங்கை பெண்கள் விமான நிலையத்தில் கைது
இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இரு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்த நிலையில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

பிண்ணனியில் உள்ளவர்கள் தொடர்பில் விசாரணை
இதன்போது கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கிய 2 இலங்கை பெண்களை சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது 2 பெண்களும் தங்களது உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.25 இலட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்படி 2 பெண்களையும் கைது செய்த தமிழக சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam