சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் பகிரங்கப்படுத்தப்பட்ட மற்றுமொரு குற்றச்சாட்டு
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நிர்வாக அமைப்பு தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடு தொடர்பில் மற்றுமொரு குற்றச்சாட்டு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் குறித்த வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் கோபாலமூர்த்தி ரஜீவை மேற்கோள்காட்டி பதிவொன்று வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பதிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது பாதிக்கப்பட்ட நபருக்கு களத்தில் இருந்தே அமைச்சர் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் வினவியிருந்தார்.
பாதிக்கப்பட்ட நபர், தனது தந்தைக்கு பாம்பு கடித்த நிலையில் அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாகவும், இதன்போது வைத்திய நிர்வாகம் சார்ந்த எவரும் அங்கிருக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் பின்னர் உடனடி சிகிசிச்சையை வழங்கவேண்டும் என்ற கட்டாயத்தில் தனது தந்தையை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri