சனல் 4 தொடர்பிலான இரண்டு நாள் விவாதம்: பயனற்ற செயல் என்கிறார் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ
வெளிநாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் புதிய சுயாதீன விசாரணையை மேற்கொள்ளாது, சனல் 4 தொடர்பிலான இரண்டு நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படுவது பயனற்ற செயலாகும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மற்றொரு விவாதம் நடத்துவது உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

விளக்கமளித்த பொலிஸ் அதிகாரி
இதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான சாட்சியங்களை மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளித்தமை, பயனுள்ள செயற்பாடல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan