பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்கள் தொடர்பில் இன்று (02) தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.
“ஏப்ரல் 30 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
எரிபொருள் விலையேற்றம்
எவ்வாறாயினும், கடந்த இரண்டு தடவைகள் எரிபொருள் விலையேற்றத்தின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாததால், ஜூலை மாதம் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இதன்படி, எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படக்கூடாது என போக்குவரத்து சங்கங்கள் தெரிவிக்கின்றன” என சசி வெல்கம கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 20 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri