உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை!
நாட்டின் உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்தினை பின்தொடர்ந்து ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் உணவு கிடைக்காமல் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் அவர் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழு வாகனங்கள் அணிவகுப்பு
மேலும், மூன்று மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான சூழலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்கள் அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |