பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர்
பதுளை பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக தேர்தல் விதிமுறைகளை மீறியவர்களை பொலிஸார் கைது செய்ததையறிந்த இராஜாங்க அமைச்சர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து வன்முறையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுகிறது.
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் சட்டங்களை மீறி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜாங்க அமைச்சரின் அடாவடித்தனம்
பதுளை பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் குறித்த குழுவை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் சம்பத் தவறாக நடந்து கொள்கிறார் என்பதை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி! Manithan
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam