வெருகல் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வும், அவர்களை வரவேற்கும் மிகவும் இன்று (9) இடம் பெற்றுள்ளன.
பிரதேச சபை செயலாளர் V. சுஜாதா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சபை உறுப்பினர்கள்
இதன்போது, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை உத்தியோதர்களால் மாலை அணிவித்து வரவேட்கப்பட்டனர்.
இதன்போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பகுகதாசன், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை தவிசாளர் சேனுராமன் கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர்.
இதனை அடுத்து, சபை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு இடம் பெற்றது.
உறுப்பினர்களாக தமிழரசு கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் இதன்போது சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
