இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான டொலர்களை ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்குவதை மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருளைக் கொண்டு வருவதற்காக எண்ணெய் கூட்டுத்தாபனத்துக்கு டொலர்களை வழங்குவதை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.
வங்கிகளிடம் தற்போது போதுமான அந்நியச் செலாவணி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் தேவைக்காக வங்கி முறையின் ஊடாக டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் மாத்திரம் மத்திய வங்கி சார்பில் தலையிடும் என குறிப்பிட்டுள்ளார்.