பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்! மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் பணவீக்கம் இம்மாதம் மேலும் அதிகரிக்கும் எனவும், அதன் பின்னர் குறையும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கூறுகையில், இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்ததை விட செப்டெம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,