உள்ளூராட்சி மன்றத் தேர்தல்!இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு வெளியிட்டுள்ள தகவல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த மற்றும் ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் அறிக்கைகள் தலையீடு செய்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி தேர்தலுக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை, நாடாளுமன்ற சிறிப்புரையை மீறும் செயல் என்று இந்த இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தனர். இது, இலங்கை நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று சட்டத்தரணிகளின் செயற்குழு குறிப்பிட்டுள்ளது.
சுயாதீனமான நீதித்துறை
நீதித்துறையின் சுதந்திரமானது இலங்கை மக்களினது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அத்துடன் குடிமகனுக்கும் அரசுக்கும் இடையில் நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சுயாதீனமான நீதித்துறை அவசியம் என்பதை அரசின் அனைத்து உறுப்புகளும் அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகளின் அறிக்கை வலியுறுத்துகிறது.
இந்தநிலையில் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சி மற்றும் நாட்டின் மக்களின் உரிமைகளுக்கு அவமானமானமாகும்.
நீதித்துறைக்கு இதுபோன்று அவமானங்கள்,சட்டப்படி நீதி வழங்கும் நீதிமன்றத்தின் திறனை குறையச் செய்துவிடும்.
எனவே வரலாற்றின் படிப்பினைகளில் இருந்து இலங்கையின் நீதித்துறையின்
சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை தவிர்க்க வேண்டும் அரசாங்கத்திற்கு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
