பெண்ணொருவரை கொலை செய்ய பின்தொடர்ந்த கார்: துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார்
கொழும்பு (Colombo) - கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் மீது மோத முற்பட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்தி, தம்மைக் கொலை செய்யும் நோக்கில் வந்த கார் ஒன்று தொடர்பில் குறித்த பெண் கடுவெல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
தகவலின் பேரில் கடுவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது, வாகனம் தப்பிச் சென்றுள்ளது.
அந்த நேரத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதும், வாகனத்தை தடுக்க முடியவில்லை.
இந்தநிலையில், 38 வயதான பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan

37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
