யாழில் கனடா பிரஜை ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!இருவர் கைது

Jaffna Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation India Canada
By Theepan Apr 16, 2023 07:22 AM GMT
Report

யாழ்.அனலைதீவில் கனடாவிலிருந்து வருகை தந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் முதன்மை சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இருவரே இன்று (16.04.2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  நட்பு ரீதியான கட்டளையில் செய்யப்பட்டதாக சந்தேகநபர்களினால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடுமையான தாக்குதல்

இதற்கமைய கடந்த பெப்ரவரி (23.02.2023) ஆம் திகதி அனலைதீவில் வீடு புகுந்த வன்முறைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாகத் தாக்கி 4 பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் 4 தங்க வலையல்கள் உள்ளிட்ட 13 லட்சம் பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.

யாழில் கனடா பிரஜை ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!இருவர் கைது | Canadian Citizen Has Been Attacked By Jaffna

இதனையடுத்து சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம் (குருசாமி வயது 75) என்பவர் கால்கள் அடித்து முறிக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

அவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கனடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை

இந்த நிலையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் உத்தரவில் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழில் கனடா பிரஜை ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!இருவர் கைது | Canadian Citizen Has Been Attacked By Jaffna

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விசாரணைகளில் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 வயதுடைய முதன்மை சந்தேகநபர் மற்றும் 24 வயதுடையவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதன்மை சந்தேகநபர் வாக்குமூலம்

கனடாவில் உள்ள ஒருவர் இந்தியாவில் வசிக்கும் ஒருவர் ஊடாக ஒருங்கிணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக முதன்மை சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தில், "இந்தியாவில் வசித்த வரதன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதனால் திட்டமிட்டபடி எதுவுமே செய்ய முடியவில்லை ஆகவே வேலனைக்குச் சென்று மீன்பிடிப் படகை வாடகைக்கு அமர்த்தி அனலைதீவு சென்று குறித்த வயோதிபர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.

யாழில் கனடா பிரஜை ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!இருவர் கைது | Canadian Citizen Has Been Attacked By Jaffna

மேலும், நகைகள் மற்றும் தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டோம்" என்று முதன்மை சந்தேகநபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைபடுத்தல்

இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் கொள்ளையிடப்பட்ட தங்க வலையல்கள் மற்றும் மோதிரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் நாளை (17.04.2023) முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US